அடுப்பில் நெருப்புக்குப் பதிலாக நாட்டு மக்களின் மனதில் நெருப்பு எரிகிறது – சஜித்

அடுப்பில் நெருப்புக்குப் பதிலாக நாட்டு மக்களின் மனதில் நெருப்பு எரிகிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

நத்தார் தினத்திற்கு முன்பு எரிபொருள் விலையை அதிகரித்து சிறந்த நத்தார் பரிசை அரசாங்கம் வழங்கியதாகவும் புத்தாண்டு பரிசாக தற்போது கையிருப்பிலுள்ள டொலர்களையும் செலவு செய்து கடன் தவனையை அரசாங்கம் செலுத்தவுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மக்கள் குறையை கேட்டறியும் மனிதாபிமான சுற்றுலாவின் இரண்டாவது விஜயத்தை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று (செவ்வாய்க்கிழமை) அம்பலாந்தொட்டையில் ஆரம்பித்து உரையாற்றியபோதே இவ்வாறு தெரழவித்தார்.

மத்திய வங்கி ஆளுநர் டொலர் மாபியாவின் வஞ்சகர் என்று கூறிய எதிர்க்கட்சி தலைவர்? அவர் இந்நாட்டு மக்களினதும் ஏற்றுமதியாளர்களினதும் வாழ்க்கையுடன் விளையாடிகொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் இதன்போது, குடும்ப ஆட்சியே நாட்டின் அழிவு என்ற துண்டு பிரசுரத்தையும் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *