சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி எதிர்வரும் ஜனவரி மாதம் 9 ஆம் திகதி இலங்கை வரவுள்ளார்.
சீன – இலங்கை தரப்புகளுக்கிடையே அண்மை காலத்தில் சர்ச்சைக்குரிய சம்பவங்கள இடம்பெற்றுள்ள நிலையில், சீன வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு வருகைதர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவருடன் தூதுக்குழுவொன்றும் நாட்டை வந்தடையவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட சீன உர கப்பல் திருப்பி அனுப்பப்பட்ட சம்பவம் தொடர்பில் அண்மையில் கருத்தாடல்கள் இடம்பெற்றன.
அவ்வாறான பின்னணியில் சீன வெளிவிவகார அமைச்சர் இலங்கை வரவுள்ளமை முக்கிய கவனம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.