கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவில் இம் முறை ,நெற்செய்கை மேற்கொண்ட விவசாயிகள் விளைச்சல் குறைவு என கவலை தெரிவிக்கின்றனர்.
கிண்ணியாவில் உள்ள பூவரசந் தீவு நெற்செய்கை விவசாயிகளும் பசளை இன்மையால் பாரிய பாதிப்பு ஏற்பட்டு விளைச்சல் குறைவடைந்துள்ளது.
இயற்சை பசளை தங்களூக்கு பயனளிக்கவில்லை யூரியா போன்ற அசேதனப் பசளை இன்மை காரணமாக இந் நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
தங்களது தொழிலாக இச் செய்கையை நம்பியே வாழ்கின்றனர். பல ஏக்கர் நிலங்களில் இச் செய்கை பண்ணப்பட்டுள்ளது .
இருந்த போதிலும் கடந்த முறையை விட இம் முறை விளைச்சலின்மை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
நெற் கதிர்களுக்கு ஒரு வகை மஞ்சல் நிறம் ஏற்படுதல், வளர்ச்சி குன்றியமை காணப்படுகிறது.
இதற்கு பிரதான காரணம் பசளை தட்டுப்பாடே ஆகும் எனவும் மேலும் கவலை வெளியிடுகின்றனர்.