
யாழ்ப்பாணம் – பருத்திதுறையில் உள்ள மீன்பிடித் துறைமுகத்தின் அபிவிருத்தி திட்டத்தை பொறுப்பேற்று முன்னெடுப்பது தொடர்பில் இந்தியா – சீனா இடையே கடும் போட்டிநிலை உருவாகியுள்ளதாக தெரிவியவருகின்றது.
கடந்த அரசாங்கத்தின் போது ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கை அரசாங்கம் இணைந்து நிதி உதவியுடன் பருத்திதுறை துறைமுகத்திட்டத்தை செயற்படுத்துவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
பாரிய நிதி முதலீட்டில் இந்த மீன்பிடித் துறைகத்தை அபிவிருத்தி செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு அதற்கான வரைபடமும் தயாரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
