ஜனாதிபதி – பிரதமருக்கு இடையே விசேட பேச்சுவார்த்தை?

ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் விசேட பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

கடமை தவறிவரும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் தொடர்பில் இருவரும் கருத்துப் பரிமாறிக்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அரசாங்கத்திற்குள் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் தொடர்பில் இருவரும் நீண்ட நேரம் கலந்துரையாடியதாக தெரியவருகிறது.

கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே, இலங்கை அதன் மோசமான பொருளாதார நெருக்கடிகளையும், அரசாங்க அணிகளுக்குள் அரசியல் சண்டையையும் எதிர்கொண்டுள்ளது.

இதனால், நிர்வாக உயர் அதிகாரிகள் ஒரு மாற்றத்தை எதிர்கொண்டுள்ள நிலையில், சில முக்கிய அமைச்சர்கள் மாற்றத்தை எதிர்கொள்வதால், மற்றொரு அமைச்சரவை மாற்றமும் விரைவில் நடைபெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ நாடு திரும்பியதும் இந்த மாற்றம் இடம்பெறலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போதைய அரசாங்கம் 2019 இல் பதவியேற்றதிலிருந்து பல முக்கிய முடிவுகளை மாற்றியமைத்துள்ளது மற்றும் உயர் பதவிகளில் அடிக்கடி மாற்றங்களைக் கண்டுள்ளது.

சில முன்னணி அதிகாரிகள் குரல் கொடுத்த காரணத்தினாலோ அல்லது தேவையற்ற அரசியல் தலையீடுகளுக்கு எதிராக பேசியதால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயு, ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் விசேட பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *