44 ஆசிரியர்களும் பிணையில் விடுதலை

சுகாதார விதிமுறைகளை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட  44 ஆசிரியர்களும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கோட்டை நீதவான் பிரியந்த லியனேகே முன்னிலையில் நேற்று (வியாழக்கிழமை) ஆசிரியர்களை முன்னிலைப்படுத்தியபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்தை இரத்து செய்தல், சம்பள முரண்பாடு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி ஆசிரியர் – அதிபர்கள் சங்கங்கள் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது, தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 16 பெண்கள் உட்பட 44 பேர் கைது செய்யப்பட்டதோடு, அவர்களுக்கு அன்றையதினமே அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

எனினும் குறித்த 44 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *