மக்களின் இரத்தத்தை உறிஞ்சுபவர் இரத்தப்போக்கு ஏற்பட்டே மரணிப்பர்! – சாபம் இடுகின்றார் சமீர பெரேரா

மக்களின் இரத்தத்தை உறிஞ்சுபவர்கள் இரத்தப்போக்கு ஏற்பட்டே மரணிப்பார்கள்
என ஐக்கிய பிரஜைகள் ஒன்றியத்தின் ஒருங்கமைப்பாளர் சமீர பெரேரா தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

கடந்த இரு தினங்களுக்குள் அரசிலுள்ளவர்கள் உட்கொண்ட உணவு தொடர்பான விடயங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியிருந்தன.

அரசில் சுவாசிப்பவர்கள் இருப்பார்களாயின் அவர்கள் உட்கொண்ட உணவுகள் சமிபாடு அடையுமா என்றே கேட்க விளைகின்றோம் – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *