யாழ்ப்பாண மாநகர சபையின் இன்றைய அமர்வில்,தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் வெளி நடப்பு செய்துள்ளனர்.
கடந்த மாதம் பிரதி முதல்வர் தலைமையில்,இடம்பெற்ற சபை அமர்வில், வர்த்தக சங்கத்தின் “கீ மணி ” விலக்கு தொடர்பில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது.
குறித்த தீர்மானம் தொடர்பில் இன்றைய சபை அமர்வில் முதல்வர் ,வி.மணிவண்ணன் சர்வாதிகாரமான கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
தான் சபையில் இருக்கும் போது மட்டுமே தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டும்,இல்லை எனின் அந்த தீர்மானம் செல்லாது என சர்வாதிகார போக்கில் கூறியிருந்தார்.
இந்த கருத்தை எதிர்த்து நாம் வெளிநடப்பு செய்துள்ளோம் என சபையின் தமிழ் தேசியக் கூட்டமைபின் உறுப்பினர் தர்ஷானந் தெரிவித்துள்ளார்.