யாழ்ப்பாணம் மாநகர சபை அமர்வில்,முதல்வர் வி.மணிவண்ணன் சர்வாதிகாரமாக செயற்படுகிறார் என தெரிவித்து தமிழ்த் தேசிய கூட்டமைபின் சபை உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ள நிலையில்,தற்போது அலுவலக வாயிலை மறித்து போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த மாதம் பிரதி முதல்வர் தலைமையில்,இடம்பெற்ற சபை அமர்வில், வர்த்தக சங்கத்தின் “கீ மணி ” விலக்கு தொடர்பில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது.
குறித்த தீர்மானம் தொடர்பில் இன்றைய சபை அமர்வில் முதல்வர் ,வி.மணிவண்ணன் சர்வாதிகாரமான கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.அதாவது தான் சபையில் இருக்கும் போது மட்டுமே தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டும்,இல்லை எனின் அந்த தீர்மானம் செல்லாது என சர்வாதிகார போக்கில் கூறியிருந்தார் என தெரிவித்த நிலையில்,தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சபை உறுப்பினர்கள் உட்பட ,தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.