‘சக்குராய்’ நிறுவனத்தின் விமானங்கள் பறக்கத் தடை!

‘சக்குராய்’ விமான நிறுவனத்துக்குச் சொந்தமான அனைத்து விமான சேவைகளும் உடன் நடைமுறைக்கு வரும்வகையில் இரத்துச் செய்யப்பட்டுள்ளன என்று, விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் டி.வி. ஷானக தெரிவித்தார்.

சிவில் விமான சேவைகள் அதிகார சபை இந்தத் தீர்மானத்தை அறிவித்துள்ளது. மறுஅறிவித்தல் பிறப்பிக்கப்படும் வரை, இந்த நிறுவனத்துக்குச் சொந்தமான அனைத்து விமான சேவைகளும் இரத்துச் செய்யப்படுகின்றன.

இந்த விமான சேவை நிறுவனத்துக்குச் சொந்தமான இரண்டாவது இலகுரக விமானமும் நேற்று விபத்துக்குள்ளான நிலையிலேயே, இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இந்த விமான நிறுவனத்துக்குச் சொந்தமான இலகுரக விமானமொன்று கடந்த 22 ஆம் திகதி பயாகல கடற்கரையோரத்திலும் நேற்று நீர்கொழும்பு பகுதியில் அவசரமாக தரையிறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *