வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன் பதவியேற்று 10 ஆண்டுகள் நிறைவு!

வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன் பதவியேற்று 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த வாரம் ஒரு முக்கிய ஆளும் கட்சிக் கூட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளார்.

கொரியாவின் தொழிலாளர் கட்சியின், 8ஆவது மத்திய குழுவின் 4ஆவது முழுமையான கூட்டம் திங்கட்கிழமை கூட்டப்பட்டது.

தொற்றுநோய் எதிர்ப்பு முடக்கநிலை, அணு ஆயுதத் திட்டம் மற்றும் இயற்கை பேரழிவுகள் மீதான சர்வதேச தடைகள் ஆகியவற்றால் ஏற்படும் பொருளாதார நெருக்கடிகளை வட கொரியா எதிர்கொள்ளும் போது கட்சி மற்றும் அரசாங்க அதிகாரிகளின் கூட்டம் நடக்கின்றது.

இந்த வார சந்திப்பு எவ்வளவு காலம் நீடிக்கும் என்று தெரியவில்லை. ஆனால், 2019இல், ஒரு முழுமையான கூட்டம் நான்கு நாட்கள் நடைபெற்றது.

கிம்மின் தந்தையும் நீண்டகால ஆட்சியாளருமான கிம் ஜோங் இல் டிசம்பர் 2011இல் இறந்ததிலிருந்து, கிம் ஜோங் உன், நாட்டின் முழுமையான அதிகாரத்தை நிறுவி வட கொரியாவின் அணு மற்றும் ஏவுகணை ஆயுதங்களை பலப்படுத்தினார்.

2021ஆம் ஆண்டிற்கான பிரதான கட்சி மற்றும் மாநிலக் கொள்கைகளை செயற்படுத்துவது குறித்து ஆய்வு செய்வதற்காகவே இந்த முழுமையான கூட்டம் என்று கே.சி.எச்.ஏ. அறிக்கை தெரிவித்துள்ளது.

வடகொரியாவுடனான உறவுகளைக் கையாளும் தென் கொரியாவின் ஒருங்கிணைப்பு அமைச்சகம் திங்களன்று, ‘வட கொரியா சர்வதேச சமூகத்துடன் உரையாடலுக்கான கதவைத் திறப்பதன் மூலம் புதிய ஆண்டைத் தொடங்கும் என்று நம்புகிறோம்’ என தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *