எமது நாட்டில் விவசாயம் என்பது இல்லை என்றே கூற வேண்டி உள்ளது என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், அரசாங்கம் விவசாயத்தை வீணடித்துள்ளதே என்று கூறலாம்.
ஒரு நாட்டில் அடிப்படையில் ஒன்று விவசாயம். விவசாயிகள் தற்போது பரிதாபமான இக் கட்டாண சூழ்நிலையில் உள்ளனர்.
அந்த அளவுக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர் அதற்கு காரணம் உர பிரச்சனை.
இவ்வளவு காலம் காணப்பட்ட உரம், இன்று உடல் நலத்திற்கு தீங்கானது என்றால் எப்படி
விவசாயிகள் மாற்று வழிக்கு உடனடியாக செல்ல முடியும்.
மக்களை இன்னலுக்கு உட்படுத்திய அரசாங்கம் இது.அவர்களால் முடியாது என்றால் விலக வேண்டும்.
எந்த ஒரு நாட்டிலும் நாட்டை கட்டி எழுப்ப நாட்டு மக்களை இன்னலுக்கு உட்படுத்திய அரசாங்கம் இவ் அரசாங்கம்.
உண்ண உணவின்றி சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது என மேலும் தெரிவித்துள்ளார்.