நாட்டில் டொலர் இல்லை என கூறிக்கொண்டு மக்கள் பணத்தில் அரசு சுற்றுலா செல்கின்றது! எதிர்க்கட்சி குற்றச்சாட்டு

நாட்டில் டொலர் இல்லை என கூறிக்கொண்டு மக்கள் பணத்தில் அரசு சுற்றுலா செல்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.

நாட்டில் டொலர் இல்லை என்றால் அதற்குரிய தீர்வை காண வேண்டும். சிறு தொழில் பயிர்செய்கை வளப்படுத்த வேண்டும்.

குறிப்பாக தேயிலை உற்பத்தி நாட்டில் வளமான உற்பத்தி ஆகும். ஆனால் இங்கு தேயிலை உற்பத்தி செய்ய உரம் இல்லை. யார் இந்த சூழ்நிலையியை உருவாக்கியது. அரசாங்கம் மட்டுமே.

அங்கு ஒரு பக்கம் எரிவாயு வெடிப்பு ஏற்படுகிறது. உயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. அதற்கும் தீர்வு என்பது இல்லை. வேறு எங்கயோ நடந்ததை போல அரசு தரப்பு உள்ளனர்.

மக்களை இன்னலுக்கு உட்படுத்தி, அங்கு எல்லோரும் மக்களின் பணத்தில் சுற்றுலா சென்று, குதுகலமாக உள்ளனர்

சுற்றுலா பயணத்தை நிறுத்தி விட்டு மக்களின் பிரச்சினைகளிற்கு தீர்வுகளை காணுங்கள் என அவர் தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *