தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனை இம்மாதம் 29ஆம் திகதி விசாரணைக்கு சமூகம் அளிக்கும்படி கோரி, தமிழ் மொழியில், அவரின் இல்லத்துக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பாணை அனுப்பி வைத்துள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைக்கு சமூகம் அளிக்கும்படி, கடந்த வாரம் தனி சிங்கள மொழியில் இந்த அழைப்பாணை மனோ கணேசன் எம்பிக்கு அனுப்பட்ட போது, அதை ஏற்க மறுத்து தமிழ் மொழியில் அழைப்பாணையை அனுப்பும்படி அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில், கடந்த ஆட்சிக்கு முந்தைய ஆட்சியின் போது நடைபெற்றதாக கூறப்படும் ஊழல்களை விசாரிக்க, கடந்த ஆட்சியில் அமைக்கப்பட்ட ஊழல் எதிர்ப்பு குழு மற்றும் அதன் செயலகம் தொடர்பாக ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட விசேட ஜனாதிபதி ஆணைக்குழு, சார்பாக ஆணைக்குழுவின் செயலாளர் எச்.எம்.பீ.பி.ஹேரத், அந்த வலய பொலிஸ் நிலையம் மூலம் குறித்த அழைப்பாணையை அனுப்பி வைத்துள்ளார்.
அங்கயன், டக்ளஸ், சுமந்திரன் அரசின் புரோக்கர்கள்: ஜே.வி.பி தெரிவிப்பு