கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன நிலையில் உலக நாடுகள் அனைத்தும் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளதுள்ளன.
அந்த வகையில் திங்கள்கிழமை ஒரே நாளில் 2800 அளவிலான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தொற்றுப் பரவலின் வேகம் காரணமாக இஸ்ரேல் தமது சர்வதேச எல்லைகளை மூடியுள்ளது. சீனா, யப்பான், கனடா போன்ற நாடுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டுவந்துள்ளன.
அமெரிக்காவில் 1200 க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதுடன் 5000 க்கும் மேற்பட்ட விமானங்கள் புறப்படுவதற்கும் தாமதமாகின. அதுமட்டுமன்றி திடீரென பயணத்தை ரத்து செய்யும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
ஐரோப்பாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து காணப்பட்டும் விமான சேவைகள் ரத்தானது மிகக் குறைவு எனவும் தெரிய வந்துள்ளது.