புகையிரத ஊழியர்களின் பணிபுறக்கணிப்பால் மக்கள் தற்போது இலவசமாக ரயிலில் பயணம் செய்யும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
புகையிரத சேவையாளர்கள் பதவி உயர்வு, புகையிரதங்களை அதிகரித்தல், பயணிகளுக்கு வசதிகள் பெற்றுக்கொடுத்தல், சேவை மூப்பின் அடிப்படையில் பதவி உயர்வு, உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து ஆரம்பித்துள்ள புகையிரத ஊழியர்கள் போராட்டத்தால் பொது மக்கள் ஐந்தாவது நாளாகவும் மலையக புகையிரத சேவைகளில் இலவசமாக இன்று பயணிக்கின்றனர்.
குறித்த போராட்டம் காரணமாக, புகையிரத பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. பயணிகள் இன்று புகையிரதத்தில் இலவசமாக பயணிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.
அந்தவகையில், மலையக புகையிரத நிலையங்களில் அதிகமானவற்றில், இன்று வருகை தந்த புகையிரத பயணிகளுக்கு புகையிரத பயணச்சீட்டுக்கள் வழங்கப்படவில்லை மக்கள் இலவசமாகவே பயணித்துள்ளனர்.
நிதியமைச்சர்கள் பொருளாதாரம் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும்! தயாசிறி