பூநகரியில் இளைஞன் கொலை: நான்கு பேருக்கு விளக்கமறியல்!

கிளிநொச்சி – பூநகரி பகுதியில் சுற்றுலா சென்ற இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் இளைஞர் ஒருவரை கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்களையும் எதிர்வரும் ஜனவரி மாதம் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும், அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறும் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பூநகரி கௌதாரிமுனை கடற்பரப்பிற்கு கடந்த 26ஆம் திகதி சுற்றுலா சென்றிருந்த இளைஞருக்கும் அதே பகுதிக்கு படகின் மூலம் வந்த குழுவினருக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையை அடுத்து குறித்த இளைஞர் ஆயுதம் ஒன்றினால் தாக்கி கொல்லப்பட்டார்.

தாக்குதலை மேற்கொண்ட சந்தேக நபர்கள் அங்கிருந்து தப்பி சென்ற நிலையில் பூநகரி காவல்துறையினர் முன்னெடுத்த விசாரணைகளில் நேற்று மாலை நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

எங்களை அபிவிருத்தி செய்வதற்கே எங்களிடம் நிதி வசதிகள் இல்லை! டக்ளஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *