
ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தரவின் இராஜினாமாக் கடிதத்தை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச ஏற்றுக்கொண்டுள்ளார். அதுமட்டுமன்றி, தற்போது பிரதமரின் செயலாளராகவுள்ள காமினி செனரத், ஜனாதிபதியின் புதிய செயலாளராக நியமிக்கப்படவுள்ளார் எனவும் செய்தி வெளியாகியுள்ளது.
அரச தலைவரின் புதிய செயலாளராக நியமிக்கப்படவுள்ள காமினி செனரத், ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ச இருந்தகாலத்தில், ஜனாதிபதியின் மேலதிக செயலாளராகவும், பிரதம அதிகாரியாகவும் கடமையாற்றியவர். இலங்கை நிர்வாக சேவையில் அனுபவம் வாய்ந்த அதிகாரி என்றும் மதிக்கப்படுகின்றார்.
இதேவேளை, பி.பீ. ஜயசுந்தரவின் நடவடிக்கைகள் அண்மைய நாள்களில் அரசாங்கத்தின் பலம்வாய்ந்த அமைச்சர்களால் விமர்சிக்கப்பட்டன. குறிப்பாக, அமைச்சர் சமல் ராஜபக்சவை பி.பீ. ஜயசுந்தர கடுமையாக விமர்சித்திருந்தார்.
தற்போதைய கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் பி.பீ. ஜயசுந்தரவை பொருளாதார கொலையாளியாக என அடையாளப்படுத்தப்படுத்தியிருந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
எனினும், செயலர் மாற்றம் தொடர்பில், ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு எந்தத் தகவலையும் வெளியிடவில்லை.