புத்தளம் முந்தல் பகுதியில் இன்று காலை வீடொன்றின் முற்றத்தில் அரிய வகை எறும்புத்திண்ணி ஒன்று அப்பகுதி மக்களால் உயிருடன் பிடிக்கப்பட்டது.
இதன்போது புத்தளம் வனஜீவராசிகள் கட்டுப்பாட்டுப் பிரிவினருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.
குறித்த இடத்திற்கு வனஜீவராசிகள் திணக்கள கட்டுப்பாட்டுப் பிரிவினர் சென்று எறும்புத்திண்ணியை உயிருடன் மீட்டு வில்பத்து சரணாலயத்தில் விடுவித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
உயிரினமான எறும்புத்திண்ணி எதிரிகளைக் கண்டால் உடலை பந்து போன்று சுருட்டி வைத்துக் கொண்டு தம்மைக் காத்துக் கொள்ளும் குணமுடையவை என தெரிவித்தனர்.
இவ் உயிரினமானது இலங்கையில் அழிவடைந்து வருவதாகவும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

செட்டிகுளத்தில் குடிமனைக்குள் கிரவல் அகழ்வதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு: பெண் ஒருவர் கைது