திவுலங்கடவல, மெதிரிகிய குசும் பொகுன பகுதியில் பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து 9 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டு நாட்களுக்கு முன்பு, குழந்தை விளையாடிக் கொண்டிருந்தபோது பந்து கிணற்றில் விழுந்ததுள்ளது.
பல சந்தர்ப்பங்களில் சிறுவன் அதைக் எடுத்துத்தருமாறு, அப்பாவிடம் கெஞ்சிய போதிலும், அப்பாவால் அந்த பந்தை வெளியில் எடுக்க முடியாமல் போயுள்ளது.
நேற்று பிற்பகல் தாயும் இளைய சகோதரனும் வீட்டை விட்டு வெளியேறிய போது, குறித்த சிறுவன் கிணற்றில் இறங்கி பந்தை எடுக்க முற்பட்டபோது கிணற்றில் விழுந்து உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்த சிறுவன் தரம் 4இல் கல்வி கற்கும் சமந்த கவிந்து சந்தருவன் குமார என தெரிவிக்கப்படுகின்றது.