
வீட்டில் நின்ற வேப்ப மரத்தைத் தறிக்கும்போது மரம் முறிந்து வீழ்ந்ததில், மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழந்தார் என்று தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. தெல்லிப்பழை சூலயம்பதி பகுதியைச் சேர்ந்த எட்வேட் மதிவண்ணன் (வயது -41) என்பவரே உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.