கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரண்டு கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் இன்று தெரிவித்தனர்.
சேனநாயக்க மாவத்தையில் உள்ள நெல் களஞ்சியசாலை பகுதியில் இருந்து குறித்த இரண்டு வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுகளை பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.
நீதிமன்ற உத்தரவின் பேரில் நாளை விசேட அதிரடிப்படையின் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினரால் கைக்குண்டுகள் செயலிழக்கச் செய்யப்படும் என கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.