வடக்கு உள்ளிட்ட சில மாகாணங்களில் மழை பெய்யும் சாத்தியம்!

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட சில மாகாணங்களில் இன்று அவ்வப்போது மழை பெய்யும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஏனைய பிரதேசங்களில் சீரான வானிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் பனிமூட்டமாக நிலைமை எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *