திருமலையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

திருகோணமலை – மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தற்போது டெங்கு தொற்றாளர்களிள் எண்ணிக்கை அதிகரித்து வருவதனால் பொதுமக்கள் தங்களது வீடுகளையும், சுற்றுச் சூழலையும் சுத்தமாக வைத்திருக்குமாறு மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி ஹில்மி முகைதீன் தெரிவித்துள்ளார்.

மேலும், வீடுகளுக்குச் சென்று எமது சுகாதார பரிசோதகர்கள் சோதனையிட்டபோது, பல வீடுகளிலிருந்து டெங்குநோயை உருவாக்கும் நுளம்புக் குடம்பிகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2020ஆம் ஆண்டு மாத்திரம் 452 டெங்கு நோயாளர்கள் இணங்காணப்பட்டிருந்தனர்.

2021ஆம் ஆண்டு அதாவது இன்று வரை 111 டெங்கு நோயாளர்கள் இணங்காணப்பட்டுள்ளனர்.

டிசம்பர் மாதம் மாத்திரம் 63 டெங்கு நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், இதனால் டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்கள் தங்களது பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *