மத்திய வங்கியின் வெளிநாட்டு நாணய செலவாணி கையிருப்பு இன்று 3.1 பில்லியன் அமெரிக்க டொலரை அடைந்துள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, தாம் அறிவித்தப்படி அதிகாரபூர்வமாக இந்த கையிருப்பை அடைய முடிந்திருப்பதாக அவர் தமது ட்வீட்டர் செய்தி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் இந்த தொகையை 2021ஆம் ஆண்டு முடியும் வரையில் தங்கவைத்துக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு அளிக்கப்பட்ட உறுதிமொழிகளை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை! தினேஸ் குணவர்தன