சுழிபுரம் மேற்கு கலைமகள் இலவசக்கல்வி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் நிரவாகத்தெரிவு!

சுழிபுரம் மேற்கு கலைமகள் இலவசக்கல்வி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் புதிய நிரவாகத்தெரிவு நேற்று பிற்பகல் சுழிபுரம் மேற்கு இலவசக்கல்வி நிலையத்தில் இடம்பெற்றது.

கடந்த 2019ஆம் ஆண்டு சுழிபுரம் இலவசக்கல்வி நிலையத்தில் கல்வி கற்று இலங்கையின் வௌ;வேறு பல்கலைக்கழகங்களில் உயர் கல்வியை தொடரும் மாணவர்கள், தமது சமூகத்தின் பாடசாலை மாணவர்களை உயர் கல்வியை பெற்றுக்கொடுக்கும் நோக்கில், கலைமகள் இலவசக்கல்வி பல்கலைக்கழகமாணவர் ஒன்றியம் உருவாக்கபட்டு இரண்டு வருட நிர்வாகக்காலம் முடிவடைந்தது.

இந்நிலையில், புதிய நிர்வாகத்தெரிவு இடம்பெற்றது.

இதன்போது, தலைவராக இ.தர்ஷன், உபதலைவராக சி.ராகவன், செயலாளராக ர.பிரியங்கா, உப செயலாளராக சௌ.கஜலன், பொருளாளராக அ.சுபாஸ்கரன், நிர்வாக உறுப்பினர்களாக ப.டிலக்சனா, து.சுதர்ஷன், த.பிரியதர்ஷினி, சி.திலக்சன், சி.தர்மிகா, சி.பிரசாந், கு.சுலக்சனா மற்றும், போஷகர்களாக அ.சிவானந்தன், திரு.கி.சுபகரன் போன்றோர் தெரிவு செய்யப்பட்டனர்.

இதன்போது. பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் கலைமகள் இலவசக்கல்வி நிலைய நிர்வாகத்தினர் உட்பட ஆசிரியர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *