இலங்கைக்கு அத்தியவசிய உணவு பொருட்கள் உட்பட பொருட்களை வழங்கும் வெளிநாட்டு நிறுவனங்கள், பொருட்களை வழங்க தயக்கம் காட்டி வருவதாக அத்தியாவசிய உணவு பொருள் இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பெற்றுக்கொண்ட பொருட்களுக்காக சரியான முறையில் டொலரை செலுத்தாதது இதற்கு காரணம் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இதனால், சில இறக்குமதி பொருட்களை இலங்கைக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கைகள் குறித்த வெளிநாட்டு நிறுவனங்களால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
பணத்தை செலுத்தும் வரை குறித்த நிறுவனங்கள் பொருட்களை வழங்குவதை நிறுத்தியுள்ளன என அத்தியவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
இது சம்பந்தமாக வர்த்தக அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் எவ்வித தீர்வும் கிடைக்கவில்லை.
எனினும், துறைமுகத்தில் உள்ள கொள்கலன் பெட்டிகளை விடுவிப்பது சம்பந்தமாக எதிர்வரும் 31ஆம் திகதி முன்னர் தீர்வு ஒன்றை வழங்குவதாக அமைச்சர் கூறினார் எனவும் அவர் தெரிவித்தார்.