
பாம்க் கடிக்கு இலக்கான குடும்பஸ்தர், சிகிச்சை பயனளிக்காது உயிரிழந்தார் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
அனலைதீவு ஐந்தாம் வட்டாரப் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேசு ரவீந்திரன் (வயது -47) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.
அவர் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.
கடந்த 16 ஆம் திகதி வீட்டு முற்றத்தில் அவர் நின்றபோது இனம் தெரியாத வகை பாம்பு ஒன்று அவரைத் தீண்டியுள்ளது. அதற்குச் சிகிச்சைபெற்று மறுநாள் வீடு திரும்பியிருந்தார். எனினும், கடந்த 26ஆம் திகதி அவருக்குத் திடீரென மயக்கம் ஏற்பட்டுள்ளது.
அதனையடுத்து அவர், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். எனினும், சிகிச்சை பயனளிக்காது நேற்றுக்காலை உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டது.
இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.