யாழ். வட்டுக்கோட்டை – செட்டியார் மடத்தில் இரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
பொன்னாலை – பருத்தித்துறை வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிளும் முச்சக்கரவண்டியும் நேற்று முன்தினம் இரவு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்விபத்து தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
10 கிலோ அரசியும், 2 கிலோ சீனியும் – அரசின் பண்டிகைக்கால சலுகை!