எரிவாயு சிலிண்டரைப் பெற்றுக்கொள்ள இன்றும் மக்கள் நீண்டவரிசையில்!

புத்தளம் – மதுரங்குளி 10ஆம் கட்டை எரிவாயு மொத்த விற்பனை மற்றும் சில்லைறை விற்பனை நிலையத்தில் இன்றும் அதிகளவிலான மக்கள் நீண்ட வரிசையில் நின்றதை காணக்கூடியதாக இருந்தது.

புத்தளம், சாலியவௌ, நிகாவெரெட்டிய, சிலாபம், வென்னப்புவ, கற்பிட்டி, கருவலகஸ்வௌ பகுதிகளிலிருந்தும் அதிகளவிலான மக்கள் எரிவாயு சிலிண்டரைப் பெற்றுக்கொள்ள வருகை தந்ததை காணக்கூடியதாக இருந்தது.

இந்நிலையில், டோக்கன் அடிப்படையில் ஒரு நாளைக்கு 100 பேருக்கு மாத்திரம் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படுவதாகவும், ஏனையவர்கள் திரும்பிச் சென்றதாகவும் எரிவாயுவைப் பெற்றுக்கொள்ள வந்த மக்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *