ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகிய செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என ஜனாதிபதியின் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும், எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதியால் எடுக்கப்படும் தீர்மானங்கள் அவரது உத்தியோகபூர்வ சமூக வலைத்தளங்கள் ஊடாக அறிவிக்கப்படும்.
ஜனாதிபதியை எவ்வாறு நியமிக்கலாம் என்றும், எவ்வாறு பதவியிலிருந்து நீக்குவது எவ்வாறு என்பதும் அரசமைப்பில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.