செயற்கையான தட்டுப்பாட்டை சந்தையில் உருவாக்கி அரிசியின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பு – புறக்கோட்டை அரிசி மொத்த விற்பனை நிலையங்களுக்கு அமைச்சர் இன்று (29) விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.
இதன்போது, ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
செயற்கையான தட்டுப்பாட்டின் பாரிய பாதிப்பை பொதுமக்களுக்கு சுமக்க நேரிடுவதாகவும் தெரிவித்தார்.






