பிரதமர் மஹிந்தவின் டுபாய் பயணம் இரத்து

அடுத்த ஜனவரி மாதம் டுபாய் புறப்படுவதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மேற்கொண்ட திட்டம் இரத்து செய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறும் எக்ஸ்போ கண்காட்சியில் பிரதம அதிதியாக கலந்து கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இதற்காக ஜனவரி 2 ஆம் திகதி டுபாய் புறப்படுவதற்கு பிரதமர் திட்டமிட்டிருந்த நிலையில் ஒரு சில காரணங்களினால் விஜயம் இரத்து செய்யப்பட்டுள்ளது.

நாட்டின் பொருளாதார நெருக்கடிகள் உள்ளிட்ட காரணங்களால் பிரதமர் தனது டுபாய் பயணத்தை இரத்து செய்துள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *