அரசில் தவறு நடந்துள்ளது என்பதை ஜனாதிபதி கோட்டா ஒத்துக்கொண்டுள்ளார் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிருப் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
சீனாவிடம் உரமும் வாங்கவில்லை, ஆனால் மக்களின் பணத்தில் சுமார் 6 மில்லியன் அமெரிக்க டொலர்களை நட்ட ஈடாக வழங்குவதற்கு அரசு முன்வந்துள்ளது.
ஆகவே அரசில் தவறு நடந்துள்ளது என்பதை ஜனாதிபதி கோட்டா ஒத்துக்கொண்டுள்ளார்.
எமக்கு அது முக்கியமில்லை.குறித்த தவறை இழைத்தவரின் தனிப்பட்ட நிதியில் இதை வழங்க வேண்டும்.அல்லது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விவாசாய அமைச்சின் செயலர் மறைமுகமாக தெரிவித்திருக்கின்றார்,இந்த நட்ட ஈடை சீனாவுக்கு வழங்கும் போது ,பலருக்கு கொமிசன் கிடைக்கும் என்று.இதிலிருந்து என்ன தெரிகிறது.ஊழல் நடைபெற்றுள்ளது என்பது மட்டுமே.
நாட்டில் எரிவாயு வெடிப்பு அனைவருக்கும் தெரிந்த விடயம்.இந்த அனர்த்தம் தொடர்பில் அரசால் நியமிக்கப் பட்ட குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
அதிலே தெளிவாக கூறப்பட்டுள்ளது வாயுக் கலவையில் மாற்றம் ஏற்பட்டதால் இவ்வாறு வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்று.
ஆனால் இது வரைக்கும் குறித்த எரிவாயு நிறுவனத்துக்கு எதிராக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.இதற்கு காரணம் என்ன?எரிவாயு நிறுவனத்துக்கும் அமைச்சுக்கும் ஏதும் தொடர்பு இருப்பதால்,அவர்களை காப்பாற்றவா ஜனாதிபதி நடவடிக்கை எடுக்காமல் உள்ளார்.
பிரதமர் மகிந்த ராஜபக்ச அண்மையில் இந்தியாவுக்கு சென்று வந்துள்ளார்.ஆனால் அவர் பயணம் செய்த ஜெட் விமானம் உகண்டாவிலிருந்து வந்துள்ளது.
அதற்கு ஒரு மணித்தியாலத்துக்கு 13 லட்சம் ரூபா வழங்க வேண்டும்.இது யாருடைய நிதி?பிரதமரின் நண்பரின் ஜெட் விமானம் என்று மகிந்தவின் மகன் கூறியுள்ளார்.இது எல்லாம் நாட்டில் நடக்கும் ஊழல் என மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் மொத்த கடனை அடைக்க நான் தயார்: ஐ.நா சபை ஏற்றுக் கொள்ளுமா? வவுனியாவில் தனிநபர் போராட்டம்