புத்தளத்தில் முன்னெடுக்கப்படவுள்ள தீப்பந்தப் போராட்டம்

புத்தளத்தில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை, தீப்பந்தப் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

புத்தளம் கொழும்பு முகத்துடலில் எதிர்வருகின்ற 2022.02.01ம் திகதி ஞாயிற்றுக் கிழமையன்று மாலை 6 மணியளவில் தீப்பந்தம் ஏந்தி கண்டனப் பேரணியொன்று முன்னெடுக்கப்பட உள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள அத்தியவசியப் பொருட்களின் விலையேற்றம் அதிகரிப்பு, எரிபொருளின் விலையேற்றம், விவசாயிகளின் உரப்பிரச்சினை போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து குறித்த கண்டன போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.

குறித்த போராட்டம் முன்னாள் வடமேல் மாகான சபை உறுப்பினர் எஸ்.எச்.எம் நியாஸ் அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற உள்ளது.

இதன்போது பொதுமக்கள், புத்தளம் மாவட்ட அனைத்து அரசியல் கட்சியினரும் குறித்த தீப்பந்த போராட்டத்தில் கலந்து கோண்டு எதிர்ப்புகளை தெரிவிக்க உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *