கடமையின் போது போதையில் காணப்பட்ட இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கொடிகாமம் பொலிஸ் நிலையத்தை சேர்ந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்களே இவ்வாறு பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரும் நேற்று (28) நண்பகல்இ கொடிகாமம் பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது மேற்கொள்ளப்பட்ட விசேட பொலிஸ் சோதனையில் அவ்விருவரும் மதுபோதையில் இருந்தமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சாவகச்சேரி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் விசேட விசாரணை மேற்கொள்ளப்பட்டு, குற்றச்சாட்டு உறுதியான நிலையில், குறித்த இருவரும் மறு அறிவித்தல் வரை பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.