பொதுமக்களின் துன்ப நிலைமையைப் புரிந்து கொள்ளும் பக்குவம் மகிந்தவிடம் உள்ளது! முருத்தெட்டுவே தேரர் நம்பிக்கை

பொதுமக்களின் துன்ப நிலைமையைப் புரிந்து கொள் ளும் பக்குவம் மகிந்த விடம் உள்ளது. இதனை தான் நம்புவதாக முருத்தெட்டுவே ஆனந்த தேரர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அபேராம விகாரையில் இன்று(29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்

மேலும் அவர் தெரிவிக்கையில்,

நாடு எவ்வளவு நெருக்கடியான நிலைக்கு தள்ளப்பட்டாலும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களை விட்டுச் செல்ல மாட்டார்.

மக்களின் பிரச்சினைகளிற்கு தீர்வைக் காணும் சக்தி அவரிடம் உள்ளது.

பொதுமக்களின் துன்ப நிலைமையைப் புரிந்து கொள் ளும் பக்குவம் மகிந்த விடம் உள்ளது.

நாங்கள் நன்றாக ஆராய்ந்து பார்த்தோம் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ மனதில் பதவி விலகுவதற்காக அவ்வாறான ஒரு தீர்மானம் இல்லை.

தற்போதுள்ள கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் ஜனாதிபதியாக ஆசைப் படுகிறார்கள் இது தான் உண்மை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது மக்களை முட்டாள்களாக்க முடியாது என்றும் பொதுமக்களுக்கு எல்லா உண்மைகளும் தெரியும் எல்லாவற்றையும் புரிந்துகொள்வார்கள்.

2022 ஆம் ஆண்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகுவதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்தி அடிப் படையற்றது எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் அரசாங்கத்தின் பதவிக் காலம் நிறைவு பெறும் வரை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலக மாட்டார்’

அதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என்றும் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் மீது மக்கள் கொண்டுள்ள வெறுப்புத் தன்மையை சரி செய்யும் உபாயத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நன்கு அறிவார் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply