நாளை நாடு திரும்புகின்றார் பஸில்!

தனிப்பட்ட பயணம் மேற்கொண்டு அமெரிக்கா சென்றிருந்த நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச, நாளை நாடு திரும்பவுள்ளார்.

அமெரிக்காவிலிருந்து இன்றிரவு கிளம்பும் அவர், டுபாய் வழியாக நாளை இலங்கை வரவுள்ளார்.

நாடு திரும்பிய கையோடு முக்கியத்துவமிக்க அரசியல் சந்திப்புகளை நடத்துவதற்கும் பஸில் திட்டமிட்டுள்ளார். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

ஜனாதிபதி செயலாளர் பதவியில் இருந்து விலகும் பிபீ ஜயசுந்தரவுக்கு நிதி அமைச்சில் வழங்கப்படவுள்ள பொறுப்பு பற்றியும் ஆராயப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *