ஜனவரி முதலாம் திகதி முதல் வெற்று சிலிண்டர்களுடன் வீதிக்கு இறங்கும் மக்கள்

எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி எரிவாயு சிலிண்டர்களுடன் மாபெரும் பேரணி ஒன்றை நடத்துவதற்கு பல சிவில் சமூக அமைப்புகள் தீர்மானித்துள்ளன.

தற்போதைய எரிவாயு தட்டுப்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த எதிர்ப்பு பேரணி நடத்தப்படவுள்ளதாக சிவில் சமூக அமைப்புகள் குறிப்பிட்டுள்ளன.

போராட்டம் நடத்தப்படும் வீதிகள் தொடர்பான தகவல்கள் நாளைய தினம் அறிவிக்கப்படும் என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பல பிரதேசங்களில் இருந்து ஆரம்பிக்கப்படும் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் அனைத்தும் பிரதான வீதிகளின் ஒரு இடத்தில் இணைந்து பயணிக்க யோசனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *