ஜனாதிபதி செயலாளராக காமினி செனரத் கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாக தகவல்!

ஜனாதிபதி செயலாளராக காமினி செனரத் கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதி செயலாளர் பதவியை வகிக்கும் கலாநிதி பிபீ ஜயசுந்தர, அப்பதவியில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளார்.

எதிர்வரும் ஜனவரி மாதம் 30ஆம் திகதி முதல் அவர் இவ்வாறு பதவி விலகவுள்ளார்.

அதன்பின்னர் பெப்ரவரி மாதம் முதல் காமினி செனரத் கடமையேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

காமினி செனரத் பிரதமர் மஹிந்தவுக்கு நெருக்கமானவர். தற்போது அலரிமாளிகையில் முக்கிய பதவி வகிக்கின்றார்.

ஜனாதிபதி செயலாளர் பதவியில் இருந்து விலகும் பிபீ ஜயசுந்தரவிற்கு நிதி அமைச்சின் உயர் பதவியொன்று காத்திருப்பதாகவும் கூறப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *