இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

டிசம்பர் மாதத்தின் முதல் 26 நாட்களில் மாத்திரம் 69 ஆயிரத்து 941 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தில் ஒரு மாதத்தில் நாட்டிற்கு வருகை தந்த அதிகூடிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இதுவெனவும் குறிப்பிடப்படுகின்றது.

இந்த வருடத்தின் முதல் எட்டு மாதங்களுடன் ஒப்பிடும் போது இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை செப்டெம்பர் முதல் டிசம்பர் 26 வரை அதிகரித்துள்ளதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய செப்டம்பர் மாதத்தில் 13 ஆயிரத்து 547 சுற்றுலாப் பயணிகளும், அக்டோபரில் 22 ஆயிரத்து 771 சுற்றுலாப் பயணிகளும், நவம்பரில் 44 ஆயிரத்து 294 சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்துள்ளனர் என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *