அரசின் முக்கியஸ்தர்கள் வெளிநாட்டுக்கு சென்று பணத்தை வீணடிப்பதை விட சிறுவர்களின் கல்விக்கு உதவி செய்யலாம் என ஆசிரியர் சேவைச் சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
நாம் நாட்டில் போராட்டங்களை நடத்துகின்றோம். ஆனால், நம்முடைய போராட்டம், சிறுவர்களின் கல்விக்கு எவ்வித பாதிப்பும் இன்றி நடத்தப்படுகிறது.
கல்வி தொடர்பில் அரசாங்கம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஜனாதிபதி சிங்கப்பூர் செல்கிறார், பிரதமர் திருப்பதி செல்கிறார், அங்கு நிதி அமைச்சர் அமெரிக்கா சென்று இன்னும் வரவில்லை. இவ்வாறு டொலர்கள் வீணடிக்கப்படுகிறது.
இது ஒரு சிறந்த நேரம் வரும் போது ஒரு சிறந்த தலைவரை நாம் தெரிவு செய்ய வேண்டும்.
கல்வி அமைச்சு 54 நிர்வாக அதிகாரிகளுக்கு, பில்லியன் கணக்கில் ஸ்கொலசிப் வழங்க தீர்மானித்துள்ளது.
தற்போது நம்மில் பலரின் எதிர்ப்பின் பேரில் தற்காலிகமாக இந்த செயற்பாடு நிறுத்தப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.