சாவகச்சேரி – கைதடி- நுணாவில் பகுதியில் இன்று (30) காலை ஒரு தொகை கேரள கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைதாகியுள்ளார்.
சாவகச்சேரி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பாலித செனவிரட்னவின் வழிகாட்டுதலுக்கு அமைய உப பொலிஸ் பரிசோதகர்களான பண்டார மற்றும் நினாஸ் ஆகியோர் தலைமையிலான பொலிஸ் குழுவினர் குறித்த கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
இந்நிலையில், கைதான நபரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.