இலங்கை அதிபர் சேவையின் மூன்றாம் தரத்திற்கு தமிழ் மற்றும் சிங்கள மொழி மூலமாக தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் அதிபர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக மொத்தமாக 4718 புதிய அதிபர்களை நியமிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இதில் தமிழ் மொழி மூலம் 1525 பேரும் சிங்கள மொழிரீதியாக 3193 பேரும் கட்டமைக்கப்பட்ட நேர்முகபரீட்சையின் அடிப்படையில் நாடளாவிய ரீதியில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.
தமிழ் மொழி ரீதியான வெற்றிடத்தை நிரப்புவதற்கு கிழக்கு மாகாணத்தில் 526 , மத்திய மாகாணத்தில் 279 , வடமாகாணத்தில் 217 , வடமேல் வாகனத்தில் 137 , சப்ரகமுவ மாகாணத்தில் 135 , ஊவா மாகாணத்தில் 87 , மேல் மாகாணத்தில் 72 , வடமத்திய மாகாணத்தில் 40, தென் மாகாணத்தில 32 அதிபர் வெற்றிடங்களுக்காக
தமிழ் மொழி மூலமான அதிபர்கள் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
2014ல் நடைமுறைக்கு வந்த அதிபர் சேவை பிரமாணக்குறிப்பை பின்பற்றி தமிழ் மொழி மூலம், சிங்கள மொழி மூலம் என தனித்தனியாக விண்ணப்பம் இம்முறை கோரப்பட்டு உள்ளமை சிறப்பம்சமாகும்.
2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற அதிபர் நியமனத்தில் இவ்விதிமுறையை மீறயமை தொடர்பாக அடிப்படை உரிமை மீறல் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டு உயர்நீதிமன்றில் வழக்கு விசாரணையில் உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இவ்வழக்கின் எதிரொலியே இம்முறை மொழிவாரியான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளதாக இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரிகளின் சங்கம் தெரிவித்து உள்ளதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.