யாழுக்கு செல்கின்றார் இராணுவ தளபதி: அரசியல் கைதிகளுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்க ஏற்பாடு !

இராணுவ தளபதி சவேந்திர சில்வா இன்று (சனிக்கிழமை) யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இதன்போது அராலியில் அமைந்துள்ள லெப்டினன்ட் ஜெனரல் டென்சில் கொப்பேக்கடுவவின் நினைவிடத்தில் இடம்பெறும் அஞ்சலி நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளார்.

1992 ஓகஸ்ட் 8 ஆம் திகதி இடம்பெற்ற கண்ணிவெடித் தாக்குதலில் லெப்டினன்ட் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ, கஜபா படையணியின் ஸ்தாபகர் உள்ளிட்டவர்கள் உயிரிழந்தனர்.

இதேவேளை யாழில் இடம்பெறும் நிகழ்வில், அண்மையில் விடுவிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளுக்கு வாழ்வாதார உதவிகளையும் இராணுவ தளபதி வழங்கவுள்ளார்.

இதற்காக தமிழ் அரசியல் கைதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *