அரசியலுக்கு அப்பாற்பட்ட சமூகத்திற்காக ஐக்கிய இளைஞர் சக்தி அறிமுகம்! ஹேஷ விதானகே

வாக்குறுதிகளை அடிப்படையாகக் கொண்ட அரசியலுக்கு அப்பாற்பட்ட சமூகத்திற்காக ஐக்கிய மக்கள் சக்தியினால், ஐக்கிய இளைஞர் சக்தி அறிமுகப்படுத்தப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினரான ஹேஷ விதானகே தெரிவித்தார்.

அம்பாந்தோட்டையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிர்வாகம் பல சந்தர்ப்பங்களில் இளைஞர்களை ஏமாற்றி வருகிறது.

பல்வேறு முயற்சிகள் மேற்கொண்ட போதிலும் இளைஞர்களுக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை.

இளைஞர்கள் பேசுவதற்கும் கருத்துக்களை வெளியிடுவதற்கும் ஒரு மேடையை அமைப்பதற்காக ஐக்கிய இளைஞர் சக்தி அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

நாட்டிலுள்ள இளைஞர் படையணி தேசபக்தியை கொண்டுள்ளதாகவும், அவர்களின் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் முன்னேற விரும்புபவர்கள் அல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, அரசாங்கத்தின் தன்னிச்சையான நடவடிக்கைகளால் இளைஞர்கள் பெரும் சுமைக்கு ஆளாகியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *