இந்தியா அணி முதல் இன்னிங்ஸில் 278 ஓட்டங்கள் குவிப்பு: 70 ஓட்டங்கள் பின்னிலையில் இங்கிலாந்து அணி!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

இதன்படி இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி வரும் இங்கிலாந்து அணி, நேற்றைய இரண்டாம் நாளில் விக்கெட் இழப்பின்றி 25 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இந்தியா அணியின் முதல் இன்னிங்ஸ் ஓட்டங்களுடன் ஒப்பிடுகையில், இங்கிலாந்து அணி 70 ஓட்டங்கள் பின்னிலையில் உள்ளது.

டோமினிக் சிப்ளி 9 ஓட்டங்களுடனும் ரொறி பர்ன்ஸ் 11 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது களத்தில் இருந்தனர்.

நொட்டிங்ஹாம்- ட்ரன்ட் பிரிட்ஜ் மைதானத்தில் கடந்த புதன்கிழமை ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, 183 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஜோ ரூட் 64 ஓட்டங்களையும் பெயர்ஸ்டோவ் 29 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இந்தியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், பும்ரா 4 விக்கெட்டுகளையும் ஷமி 3 விக்கெட்டுகளையும் தாகூர் 2 விக்கெட்டுகளையும் சிராஜ் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா அணி 278 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, கே.எல். ராகுல் 84 ஓட்டங்களையும் ரவீந்திர ஜடேஜா 56 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் ஒல்லி ரொபின்சன் 5 விக்கெட்டுகளையும் ஜேம்ஸ் எண்டர்சன் 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 95 பின்னிலையில் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி, 11.1 ஓவரின் போது துடுப்பெடுத்தாடிக் கொண்டிருக்கையில் மழைக் குறுக்கிட்டது. இதனால் போட்டியின் மூன்றாம்நாள் ஆட்டம் இடை நிறுத்தப்பட்டது.

இதற்கமைய இங்கிலாந்து அணி, நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 25 ஓட்டங்களை பெற்றது.

இன்னமும் 10 விக்கெட்டுகள் வசமுள்ள நிலையில், போட்டியின் நான்காவது நாளில் இங்கிலாந்து அணி இன்று இரண்டாவது இன்னிங்சை தொடரவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *