முந்தல் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற செயலமர்வு

முந்தல் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பினருக்கு சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் சேவைகள் பற்றிய தெளிவூட்டல் பயிற்சி பட்டறையொன்று இன்று முந்தல் சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கிச் சங்க கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

முந்தல் சமுர்த்தி தலைமையக முகாமையாளர் ஆர்.டி.ஏ.ஐ.ஆரியரத்ன தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் புத்தளம் மாவட்ட மீளாய்வு , சமூக அடிப்படை சமுர்த்தி அபிவிருத்தி முகாமையாளர் பி.எம்.உபுல் நனநானந்த பிரதம விரிவுரையாளராக கலந்துகொண்டார்.

இதில் மங்கள எளிய சமுர்த்தி வங்கி முகாமையாளர் எஸ்.எம்.நபீல், மதுரங்குளி முகாமையாளர் ரி.பி.நிரோசனி தமயந்தி உட்பட முந்தல், மங்கள எளிய, மதுரங்குளி சமுர்த்தி வங்கியின் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் தலைவர்கள், செயலாளர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது 2022 தேசிய வரவு செலவு திட்டங்கள் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள சுயதொழில் அபிவிருத்தி திட்டங்கள் பற்றி தெளிவூட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *