பஸ் கட்டணங்கள் திருத்தப்பட்டாலும், தற்போதைக்கு ரயில் கட்டணங்கள் அதிகரிக்கப்படாது என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
எரிபொருள் கட்டண அதிகரிப்பினால் பஸ் கட்டணத்தை அதிகரிக் குமாறு பஸ் சங்கங்கள் விடுத்த கோரிக்கையின் காரணமாகவே பஸ் கட்டணத்தை 17 வீதத்தால் அதிகரிக்க நேரிட்டதாக தெரிவித்தார்.
மேலும், எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் குறிப்பிட்டார்.
இதேவேளை, ரயில் கட்டணத்தில் திடீர் திருத்தம் செய்ய முடியாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.