திருகோணமலை – வெருகல் பிரதேச செயலகத்தில் பணியாற்றி இடமாற்றம் பெற்று சென்ற உத்தியோகஸ்தர்களுக்கான பிரியாவிடை நிகழ்வும் அதனோடு இணைந்ததாக 2021 ஆம் ஆண்டிற்கான வருட இறுதி கொண்டாட்ட நிகழ்வும் இலங்கைத்துறை முகத்துவாரத்தில் இன்று (30) இடம்பெற்றது.
இதன்போது இடமாற்றம் பெற்றுச் சென்ற உத்தியோகத்தர்களுக்கான நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இந் நிகழ்வானது வெருகல் பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.கனி தலைமையின் கீழ் அலுவலக நலன்புரிச்சங்கத்தினரால் நடாத்தப்பட்டது.
இதன்போது எமது பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.கனி, வெருகல் முன்னாள் பிரதேச செயலாளர் குணநாதன், உதவி பிரதேச செயலாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர், அலுவலகத்தில் பணியாற்றி இடமாற்றம் பெற்று சென்ற உத்தியோகஸ்தர்கள், பிரதேச சபை தவிசாளர் மற்றும் அலுவலக ஊழியர்களும் கலந்துகொண்டனர்.
இதன் வெருகல் பிரதேச உத்தியோகத்தர்களிடையே விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றதோடு, விருந்துபசாரமும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது .